My blogs, Brags all here.

Showing posts with label Sexy girl friend. Show all posts
Showing posts with label Sexy girl friend. Show all posts

Wednesday, February 24, 2016

என்(ன) வேண்டும்!

சுமைகள் தாங்கி குறைகள் நீங்கி 
சுகமும் பொங்கி பெருமை வாங்கி வழங்கிட வேண்டும்.

சாதி தவிர்த்து மீதி பிடித்து
நீதி படித்து நித்தமும் இனித்து ஒன்றிட வேண்டும்.

காரணம் கொண்டு காரியம் கண்டு
வீரியம் ஒண்டு வீரமும் உண்டு முடித்திட வேண்டும்.

பண்பில் பார்த்து அன்பில் சிலிர்த்து
அறிவினில் திகைத்து அறவே காதலித்து கலந்திட வேண்டும்.

நாணம் துறந்து நாலும் திறந்து
காமம் சிறந்து நாளும் இறந்து பிறந்திட வேண்டும்.

அன்பு காட்டி ஆசைப் பூட்டி
அறிவு கூட்டி குழந்தை குட்டி வளர்த்திட வேண்டும்.



மண்ணில் ஆயிரமாயிரம் உறவுகள் கண்டு
மானுடர் யாவரும் நண்பராய் கொண்டு (வாழ்ந்திட வேண்டும்.)

பெரும்பலர் போற்றி ஒருசிலர் தூற்றி
அனைவரும் அன்புடன் வாழ்த்தி நெற்றி உயர்ந்திட வேண்டும்.

மடமையை ஒழித்து மதங்களை உடைத்து
உரிமையை எடுத்து கடமையில் களித்து நிலைத்திட வேண்டும்.

பலகலை கற்று சிலகலை கற்பித்து
தலைக்கன மற்று உலகினை புதிப்பித்து வளர்ந்திட வேண்டும்.

பாசாணம் விட்டு பயிர்களை இட்டு
பாசனம் சொட்டு இயற்கையுடன் எட்டு வைத்திட வேண்டும்.

மோகம் அழித்து கானகம் என்
தாயகம் அமைத்து நாயகன் நான் ஆகிட வேண்டும்.

பாபல பாடி கதைகளைப் பேசி
மாபல வாழை இவைகளை இரசி புசித்திட வேண்டும்.


உடலுக்குத் தேவைகுன்றி சாவேயன்றி சுதந்திரம்
உலகுக்கு தொல்லையின்றி எல்லையின்றி நிரந்தரம் ஆகிட வேண்டும்.

நான் நிரந்தரம் ஆகிட வேண்டும்! 

Sunday, March 21, 2010

நான் நாணமின்றிக் கண்ட காட்சி......

அதி காலை, உதரி எழுந்து நின்றேன்...

ரதி, வாலைக் குமரி, செவ்வுடை கண்டேன்.

இன்புற்று, இலகிப் போய், நின்றேன்.

இனியவளுடை இலகிப் போக, கண்டேன்.


பூண்ட உடை மீண்டதால், நாணுடை

பூண்டாள். அதைக் கண்டதால், நானும் விடை

பெற்றேன், உள்ளுயிர் துடிக்க, மெய்

ஏனோ வெடிக்க, நாணப் பொய்யோடு.


மாலை மீண்டும் கண்டேன், என்

மானை. கண்(ட) ணசையாது நின்றேன்.

வெளுத்த அவள் இடையை,

தழுவியது கருத்த உடை.


நான் நாடிய ஒரு நொடி,

அவள் நாணிய சிறு கொடி...

உடை இடை நழுவியதால்.

உயிர் உடல் கண்டதால்.


நான் களித்து சிரித்தது ஒரு நொடி,

அவள் கடிந்து ஒளித்தது, பெருவெடி...

இத்தனை சினம் என் மேலேனடி?

இதற்கு (பொ)போய் அழுவான் ஏனடி?

- பாரதிக் கண்ணன்.



வழக்கமான விளக்கம் : -

காலைல கொசு மற்றும் கனவுத் தொல்லைனால எந்திருச்சேன். சூரிய ஒளில்ல சும்மா கும்முன்னு இருந்தா, என் காதலி. வானம். மெதுவா மறைஞ்சுச்சு, அந்த சிகப்பு வண்ணம்... எனக்குள்ள ஏதேதோ எண்ணம், உடம்புக்கு தெம்பா இருந்துச்சு. இருந்தாலும் வந்துட்டேன், வேலை ஏதோ செய்யப் போற மாதிரி... சாயங்காலம் மறுபடியும் வெட்டியா வேடிக்கை பாத்திட்டுருந்தேன், (வேரென்ன வேலை?) திடீர்ன்னு மேகம் மூண்டுச்சு. (எனக்குள்ள கவிதா மோகம் தூண்டுச்சு... அதான் இது!) வெள்ளை வானத்த, கருப்பு மேகம் மூடுச்சு..... வெளிச்சம் வராதான்னு நினைச்சேன்... பளீர்ன்னு வந்துச்சு பவர் சோப்போட வெள்ளையா ஒரு மின்னல், ஒரே ஒரு நொடிதான்... (என்ன வெக்கமோ?) சந்தோஷமா நான் சிரிச்சேன் (அதுல என்ன குத்தமோ?) டுமீல்னு ஒரே இடிதான்..... இதுக்குப் போய் கோபமான்னு கேட்டேன்... அவ்வளவுதான், பொசுக்குன்னு அழுதிட்டா...


“இது தப்புனா மன்னிச்சுடுங்க...”. தெரிஞ்சே நான் தப்பு செய்யல, சூழ்நிலை, சூன்யம் பன்னீடுச்சு. தயவு செயஞ்சு அவகிட்ட சொல்லி புரிய வைங்க... இப்பயெல்லாம் என்னை பாத்தா சிரிக்க்க் கூட மாட்டேங்குறா... அவள் உக்ரமும் உஷ்ணமும் தாங்கல. நீங்கதான் என் காதலோட ஆழத்தை சொல்லனும், அவகிட்ட... என் மேல, அவளுக்கு கோபம் இருக்காதுல... என் காதல் ஜெயிக்கும்ல...